Breaking News

விஜய தசமியை முன்னிட்டு அரசு பள்ளிகள் திறப்பு.? தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு.!!!

 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, விஜயதசமி அன்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளையும் திறந்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், புதிய மாணவர்களைச் சேர்க்கும் பணியை மேலும் துரிதப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதுடன், கல்வித் தரமும் உயர்ந்துள்ளது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயதசமி போன்ற முக்கிய நாட்களில் பள்ளிகளைத் திறந்து வைத்து, பெற்றோர்களை அரசு பள்ளிகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தொடர் விடுமுறைகளால் பெரும்பாலான குடும்பங்கள் வெளியூர் செல்ல திட்டமிட்டு இருக்கலாம் . இருப்பினும், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.