இச்சான்றிதழ் பெற்ற இளம்வயது இந்தியர் என்ற சாதனையும், குறைந்த வயதில் 100 மதிப்பெண்கள் பெற்றவர் என்ற சாதனையையும், தன்வசம் வைத்துள்ள இச்சிறுவனை ஜாவா சாம்பியன் என அனைவரும் அழைக்கிறார்கள். 1ம் வகுப்பு படிக்கும் போது கம்யூட்டர் மீதிருந்த ஆர்வத்தால் அனிமேஷன், கோரல்டிரா, சி, சி++ ஆகியவற்றை கற்றறிந்த ரூனில் ஷாவின் கவனம் ஜாவா பக்கம் திரும்பியது. ஜாவா கற்பதற்காக, காலை 11.30 மணிக்கு தான் படிக்கும் கம்யூட்டர் சென்டருக்கு செல்லும் இவர் மாலை 6 மணி வரை ஜாவாவில் மூழ்கி விடுவாராம்.
தனது இச்சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரூனில் ஷா, வரும்காலத்தில் ரோபர்டிக்ஸ், அட்வான்ஸ்டு ஜாவா, ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு பற்றி கற்க அதிக விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார்.