IMPORTENT LINKS

மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விருது!


மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவுக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 
வருகிற டிசம்பர் 3ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கவுள்ளார்.குடியரசுத் தலைவர் விருது பெறவுள்ள மாவட்ட ஆட்சியர்வீரராகவ ராவுக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு, தூய்மை பாரதம் ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது