IMPORTENT LINKS

பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து: நாளை ஆலோசனை

பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், நுழைவுத் தேர்வு பயிற்சி, 'ஸ்மார்ட்' வகுப்பு என, பல்வேறு திட்டங்கள், பள்ளிக்கல்வித் துறையில் அமல்

படுத்தப்பட உள்ளன. அது குறித்து, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், நாளை, ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்விஇயக்குனர், இளங்கோவன் பங்கேற்கின்றனர்.