IMPORTENT LINKS

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

*தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்*


தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்.தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்

விடைத்தாள் திருத்தமாட்டோம்... ஆசிரியர் கூட்டணி முடிவால் அதிர்ச்சி



திண்டுக்கல்: புறக்கணிப்பு... புறக்கணிப்பு... ஆசிரியர் கூட்டணி முடிவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!



கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் கூட அரசு பள்ளிகளில் படிகின்ற நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம்.
பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்கின்ற கல்வியை உருவாக்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்! -விகடன் நியூஸ்



நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும்
விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை
உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு : தமிழக அரசு அறிவிப்பு



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1-1-2016 முன் தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த 1-10-2017 அன்று அரசு அறிவித்தது.

தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்



பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக்
கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

இருபதாண்டுகளாக அரசை ஏமாற்றி பணிபுரிந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!


திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ராந்தம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இதில், ரீட்டா, 47, என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர், 1996 அக்., 7ல், பணியில் சேர்ந்தார். இவரது இடைநிலை கல்வி மதிப்பெண் சான்றிதழ், மாவட்ட கல்வித்துறை மூலம், உண்மை தன்மை ஆய்வுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், போலி சான்றிதழ் என தெரிந்தது.
இதையடுத்து, ரீட்டாவை, &'சஸ்பெண்ட்&' செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசு உத்தரவிட்டார். அவர் மீது, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு


குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.

DA Arrear Calculation Software


  • DA Arrear Calculation Software | Mr. Senthil Kumar - Click Here
  • Instruction for DA Arrear Calculation Software - Click Here

Flash News : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்அறிவிப்பு



கோடை   விடுமுறை  முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும்   என
அமைச்சர் செங்கோட்டையன்   அறிவித்துள்ளார். புதிய  பாடத்திட்டம்  அமல்  படுத்த  ஏதுவாக  இம்முடிவு

அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் மே மாதம் மூன்றாவது வாரத்தில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த அரசு திட்டம்



அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் மே மாதம் மூன்றாவது வாரத்தில்
இடமாறுதல் கவுன்சிலிங்!!

🅱REAKING அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு!!



*அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி
தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள்
பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது. வீட்டுக்கடன் பெற 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது

Flash News : ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு புதிய தலைவராக ஜெயந்தி IAS-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவு.

500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் - அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு,அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த உடன் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப் படும்.
 நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாட்களிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு


நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை