IMPORTENT LINKS
▼
பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு!!!
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை
ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள்
தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து
1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: பள்ளி கல்வித் துறைக்கு ரூ.27,205 கோடி
2018-19-ஆம் ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்
பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்
பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை
கண்டித்தும், புதிய ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர
வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசத்தும் SSA மேற்பார்வையாளர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மைய வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக புதர்களும்,
செடிகளுமாய் காட்சியளித்தது..
Vikatan முக்கிய செய்திகள் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள். `இது எந்த வகையில் நியாயம்?' என, தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்'
தமிழக அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:தற்போது, பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும், 7,297 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில், 450 சார் - பதிவாளர்கள்; 600 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 1,150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள பலர், புதியவர்களாகவும், பெண்களாகவும் உள்ளனர். அதனால், தேர்தல் பணியில் அனுபவம் உள்ள, பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டு எண்ண, வட்டார அளவில் மையங்களை அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணி ஊழியர்களுக்கு, இயல்பு பணிகளில் இருந்து விலக்களித்து, கால நீட்டிப்பு வழங்க வேண்டும். புதிய ஊழியர்களுக்கு, தேர்தல் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், தேர்தல் பணியை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்
பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு,
பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு
என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக
மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி
செய்யப்பட்டுள்ளது
Flash News : அரசு பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடங்க அமைச்சரவை கூட்டம் கூட்டி ஒப்புதல் பெற்று விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பால் கூட்டுறவு சங்க தேர்தல் பணி தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அவதி
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது
மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி
மற்றும் நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள்
எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு
நடத்தப்பட்டது.
மே 8 ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ- ஜியோ முடிவு
திண்டுக்கல்: 'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல்
கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என
பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை
முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக
நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல்
துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது.
CPS NEWS: CPS வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTI சட்டப்படி தகவல் வழங்க இயலாது.
*இன்று வரை CPS வல்லுநர் குழுவால் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படவில்லை.*
CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை
.
CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று (05.03.2018) நீதியரசர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.நிதித்தறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை.
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன
விளம்பர எண்: 492
விளம்பர நாள்: 01.03.2018

















